திங்கள், 5 மே, 2014

குறள் எண்: 632 திருக்குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்: அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன். பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்: செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

May 05, 2014 at 05:23PM via Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக