திங்கள், 16 மே, 2011

இன்றைய குறிப்பு

கோஸ், கேரட், பீன்ஸ், பீட்ரூட் பொரியல் செய்யும்போது மிளகாய் சேர்க்காமல், மிளகு தட்டிப்போட்டு தேங்காய் போட்டு கிளறி இறக்க, ருசியாகவும் இருக்கும், நன்கு ஜீரணமும் ஆகும்.

ஞாயிறு, 15 மே, 2011

இன்றைய குறிப்பு

எந்த பழம் வெட்டினாலும் அந்த சாறை முகம், கை, கழுத்து மற்றும் காலிலும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவிவிட மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

செவ்வாய், 10 மே, 2011

இன்றைய குறிப்பு

போட்டோ சுற்றிலும் வேப்பெண்ணை தடவிட பூச்சி அரிக்காமல் இருக்கும். சுவாமி படங்களுக்கும் செய்யலாம்.

திங்கள், 9 மே, 2011

இன்றைய குறிப்பு

தினம் பால் காய்ச்சும்போது வரும் பாலேட்டினை சிறிது தயிர் உறைவிட்டு ஒரு வாரம் பிரீசரில் வெய்க்கக்  கெடாமல் நன்றாக இருக்கும். இதைக்  கடைந்து வெண்ணை எடுக்கலாம்.

ஞாயிறு, 8 மே, 2011

இன்றைய குறிப்பு

பெரிய வெங்காயம் சுலபமாக உரிக்கவேண்டுமானால் இருபுறமும் வெட்டி நீரில் போட்டு பத்து நிமிடங்கள்  கழித்து தோல் உரித்து கழுவி நறுக்க தோலும் சுலபமாக வரும் கண்களில் நீர் வடியாது.

சனி, 7 மே, 2011

இன்றைய குறிப்பு

பாட்டில், கண்டைனர் திறக்கமுடியவில்லயானால், வாயால் மூடி  சுற்றிலும் ஊதினால் சுலபமாக திறக்கலாம்.

வெள்ளி, 6 மே, 2011

இன்றைய குறிப்பு

தலைக்குளிக்க கால் கிலோ சீக்காயுடன் ஒரு கிலோ அரிசி, ஐம்பது கிராம் வெந்தயம், சேர்த்து கொரகொரவென்று  அரைத்து ஒரு தலைக்கு வேண்டியளவு எடுத்து அதில் முக்கால் பங்கு சீக்காய்தூள் எடுத்து கொதிநீரை கொட்டி நன்கு கிளறி சிறிது சூடாறியபின் வேண்டிய அளவு நீர் கலந்து தலை கசக்க எண்ணெய் விட்டு  முடி சுத்தமாகவும், பளபளவெனவும், மெத்தென்றும் இருக்கும்.

வியாழன், 5 மே, 2011

இன்றைய குறிப்பு

தேங்காய் பர்பி செய்து திறக்கும் தருவாயில், பன்னீர் தெளித்து கிளறி தட்டில் கொட்டி ஆறவிட்டு வில்லைபோட்டு சாப்பிட வாயில் கரையும் அளவு ருசியாக இருக்கும்.

புதன், 4 மே, 2011

இன்றைய குறிப்பு

வீடு பெருக்கும் துடைப்பம் (ரங்கூன் துடைப்பம், பூந்துடைப்பம்) வாங்கினால், முதலில்  அதனை சுரசுரப்பான இடத்தில் தேய்க்க பூக்களெல்லாம் உதிர்ந்துவிடும். பிறகு ஈரத்தில் நனைத்து காயவைத்து பெருக்குவதற்குமுன் மறுபடியும் தேய்த்து தட்டிவிட்டு பெருக்கினால் அதில் உள்ள பூக்கள், முட்கள் அதிகமாக கொட்டாது. சிறிது, சிறிது இருந்தாலும் ஒரு வாரத்தில் கொட்டி சரியாகிவிடும்.

திங்கள், 2 மே, 2011

இன்றைய குறிப்பு

வாழைக்கறை, பீட்ரூட் கறை, கை பிசுபிசுப்பு போக கையில் எண்ணெய் அல்லது உப்பு(salt) போட்டு தேய்த்து பிறகு sabena அல்லது சோப்பு போட்டு தேய்த்து கழுவ கைகள் சுத்தமாகிவிடும்.

ஞாயிறு, 1 மே, 2011

இன்றைய குறிப்பு

வீடு துடைப்பதற்கு முன் மூலைமுடுக்குகளில் சோப்பு நீரில் பழைய சாக்சை நனைத்து தேய்த்துவிட்டு துடைக்கும்போது அழுக்கு வந்துவிடும், பூச்சிகள் அண்டாது.

சனி, 30 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

பெயிண்டிங் பிரஷ் பெரிதும் சிறிதுமாக 2 வாங்கி வைத்துக் கொண்டால், எலெக்ட்ரிக் கூக்கர், ப்ரிட்ஜ் டப், மிக்ஸி போன்ற இன்னும் பல எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்கல் பொருட்கள், ஜன்னல், கதவு போன்ற கை நுழையாத இடங்களில் சுத்தம் செய்யலாம்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

வாஷ்பேசின், சாமான் துலக்கும் sink போன்ற இடங்களில் நேப்தலின் பால்ஸ் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது. துர்நாற்றமும் இருக்காது.

வியாழன், 28 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

பலாசுளையை தேனுடன் சாப்பிட வயிற்று வலி வராது. வெறும் சுளைகளாக சாப்பிட்டால் சூட்டைக் கிளப்பி வயிற்று வலி வரும்.

புதன், 27 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

தலையில் அடிபட்டு முடி முளைக்காமல் இருந்தால்: அவ்விடத்தில் ஒற்றைச் சிவப்பு நிற செம்பருத்திப் பூவை  தேய்த்துவர நாளடைவில் முடி வளர ஆரம்பிக்கும். மீண்டும் முடி வளர ஆரம்பித்தவுடன் நிறுத்திவிடவும்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

நகச்சொத்தையும் வெடிப்பும் உஷ்ணமும் போக: பச்சை மருதாணி இலைகளை  அரைத்து  கை விரல்களுக்கு தொப்பிபோல் வைத்து, உள்ளங்கையிலும், உள்ளங்கால்களிலும் வட்டமாக இட்டு, கால் விரல்களுக்கும், பாதம் சுற்றிலும், மற்றும் வெடிப்புகள் உள்ள இடங்களிலும் இட்டு  3 அல்லது 5 மணிநேரம் கழித்து கழுவிவிட அழகாகவும் இருக்கும், உபாதைகளும் தீரும்.
குறிப்பு: மருதாணி போட்டபின் அவ்வப்பொழுது எலுமிச்சை நீர் விட்டுகொண்டிருக்க, நன்கு சிவந்து, உடல் குளிர்ச்சிபெறும்.

திங்கள், 25 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

சின்ன வெங்காயத்தை அரியாமல் நசுக்கிப்போட்டால், சுவையும் பிரமாதமாக இருக்கும், வேலையும் சுலபமாகிவிடும்.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

பெரிய வெங்காயத்தை இருபுறமும் அறிந்துவிட்டு வேற்பகுதியிலிருந்து உரிக்க சுலபமாக உரிக்கவரும். அதேபோல் சின்னவெங்காயத்தை இருபுறமும் நறுக்கி நீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து கையில் நசுக்க தோல் உறிந்துவிடும்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

பிரிட்ஜின்  பிரீசரில் பேப்பர் போட்டு அதன்மேல் பாத்திரங்களை வெய்த்தால் பாத்திரங்கள் ஒட்டாமல் சுலபமாக எடுக்க வரும்.

வியாழன், 21 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

அரிசி குக்கரில் வேகவைக்கும்பொழுது நான்கு உப்புக்கற்கள் போட்டு வேகவைத்தால் வாய்வு ஏற்படாது. அதற்கேற்றாற்போல் குழம்பு, ரசத்தில் உப்பைக் குறைத்துக்கொள்ளவும், சுவையும் நன்றாக இருக்கும்.

புதன், 20 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

முகப்பூச்சு (மேக்-அப்) போடுவதற்கு முன் பிரிட்ஜில் வைத்த நீர் அல்லது ஐஸ் கட்டியை முகத்தில் தடவி ஆறவிட்டு பிறகு முகப்பூச்சு போட நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.

திங்கள், 18 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து குளுமை தரும். உடல் குளிர்ந்த பிறகு வெள்ளரிக்காய் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவோ அல்லது நிருத்திக்கொள்ளவோ செய்யலாம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

கண்ணாடி வளையலைக் கொதிக்கவைத்த நீரில் போட்டு ஆறியவுடன் எடுக்க, என்றும் புதிதுபோல் நீண்ட நாட்கள் உடையாமல் இருக்கும்.

சனி, 16 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

கண்ணை சுற்றி கருவளையம் இருந்தால், உருளைகிழங்கை வெட்டி அப்படியே (தினமும்) தேய்த்துவர நாளைடைவில் மறைந்துவிடும்.

புதன், 13 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

கரப்பான்பூச்சி வராமல் இருக்க: போரிக் ஆசிடை கோலமிழைபோல் சுவற்றின் ஓரமாக தூவவும்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

நெற்றியில் பொட்டிடும் இடத்தில் அரிப்பு வராமலிருக்க: கலி பாக்கினை  நீரில் இழைத்துப்  பொட்டிடும் இடத்தில் தடவி அதற்கு மேலே பொட்டிட, நாளடைவில் அரிப்பும், புண் அடையாளம் ஏதும் இருப்பின் மறைந்துவிடும். இல்லாவிடில், வாழைப்பழத் தோலினை (வெள்ளையான உட்புறப் பகுதி) தேய்த்து வந்தால்  சரியாகிவிடும்.


ஜெயம்மா.


கேள்விக்களம்

இன்று  தொடங்கி கேள்விக்களத்தில் நீங்கள் கேட்கும் அழகு, உடல்நலம், சமையல் மற்றும் வீட்டை பராமரித்தல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.


ஜெயம்மா.

வாழ்க வளமுடன்