வாணலியில் 2 ஸ்பூன் எண்ணையை சுடவைத்து, கட்ட மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்,
மஞ்சள் தூள் ரெண்டு சிட்டிகை, பெருங்காய தூள் 2 சிட்டிகை, உப்பு
(டேபிள் சால்ட்) தேவைக்கேற்ப, 2 பல் பூண்டு தட்டி போட்டு 3 நிமிடங்கள்
வறுத்து 2 ஆழாக்கு (டம்ளர்) பொரியை கொட்டி கிளறவும். அப்படி கிளறும்போதே
இதனுடன் வறுத்த வேர்கடலை 1 கரண்டி, அவல் 1/2 டம்ளர், உடைத்த கடலை 1 கரண்டி
போட்டு கிளறி இறக்கவும்.