ஞாயிறு, 13 ஜூலை, 2014

குறள் எண்: 19 திருக்குறள்: தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்: மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.