ஞாயிறு, 13 ஜூலை, 2014
குறள் எண்: 19
திருக்குறள்:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)