சனி, 14 ஜூன், 2014

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1puolfT

மௌனம் மௌனம் ஒரு உன்னதமான வழிபாட்டு முறையாகும். இதை முடிந்த அளவிற்குத் தினமும் கடைப்பிடித்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். இல்லையேல் குரு நாளாகிய வியாழன், அமாவாசை, பெளா்ணமி நாட்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆரம்பத்தில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மௌனத்தைக் கடைப்பிடித்து அது நாளாக நாளான சுமார் ஒரு மணி நேரம் வரை அதிகப் படுத்துவது மிகவும் நல்லது. மௌனம் மனத்தை ஒருநிலைப்படுத்த வல்லது. தொடா்ந்து மௌனத்தைக் கடைப்பிடிப்பவா்கள் எளிதில் சஞ்சலம் அடைய மாட்டார்கள். மனமும் வலமையடையும் அவா் எண்ணங்களும் உறுதி பெறும். மௌன விரதம் மேற்கொள்வதற்கு ஐந்து விடயங்கள் தேவை 1.மௌன விரதம் 2.பால், பழவகை போன்ற எளிய உணவு 3.இயற்கை அழகு மிக்க இடத்தில் தனியாக இருத்தல் 4.குருவின் நேரடித்தொடா்பு 5.குளிச்சியான இடம் தினமும் ஒருமணி நேரம். வாரத்திற்கு 3 மணி நேரம். மாதத்தில் ஒரு முழுநாள். இப்படி மௌன விரதம் பழகி வரவேண்டும். இதனால் கிடைக்கும் ஆனந்தம், அமைதி, புத்துணா்ச்சி ஆகியவற்றை அனுபவத்தில் உணர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக