Source:
Sakthi Vikatan
http://ift.tt/1uBbgCg
#சித்திரைத் திருவிழா- ஐந்தாம் நாள் சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகளோடு வெகு விமர்சையாக சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள் கொண்டாடப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடியில் இருந்து தங்க குதிரைகளில் சுவாமியும், அன்னை மீனாட்சியும் மக்கள் முன் எழுந்தருளினர். சுவாமியும் பிரியாவிடையும் ஒரு தங்க குதிரையிலும், மீனாட்சி தாயார் மீனாட்சி ஒரு தங்க குதிரையிலும் வீதி உலா வரும் அழகை காண ஏராளமான பக்த்தர்கள் வந்திருந்தனர். நமது மனக்குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன் இறைவனடி அடைவான் என்பதை உணர்த்துகிறது தங்கக்குதிரையில் வீதி உலா எழுத்து : ச.பா.முத்துகுமார் படங்கள் : பா.காளிமுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக