செவ்வாய், 13 மே, 2014

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1nDyqq7

சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களை செய்ய இயலாது. குரு ஒரு பாத்திரத்தை மாணவர்கள் முன் வைத்தார், அதற்குள் பெரிய பெரிய கற்களை வைத்தார்,ஐந்து கற்களை வைத்ததும் பாத்திரம் நிறைந்துவிட்டது. குரு:- பாத்திரம் நிரம்பி விட்டதா? மாணவர்கள்:- நிரம்பிடுச்சு... குரு :-இல்லை...!!! (என சிறு சிறு கற்களை போட்டுக் குலுக்கி பாத்திரத்தை நிரப்பினார்) குரு:- இப்போது . . .? மாணவர்கள்:- நிறைஞ்சிடுச்சி குரு:- இல்லை...!!! (அடுத்து மணலை கொட்டினார் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் மணல் போய் நிறைந்தது) குரு :-இப்போது . . .? மாணவர்கள்:- முழுவதும் நிரம்பியது குரு:- இல்லை...!!! (அடுத்து நீரை ஊற்றினார் மணல் இழுத்துக்கொண்டது) குரு:-இதிலிருந்து என்ன தெரிகிறது மாணவன் :-முயற்ச்சி செய்தால் எதுவும் சாத்தியம் குரு:-உண்மைதான்...!!! ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் பாத்திரத்தில் முதலில் மணலை கொட்டியிருந்தால் இந்த பெரிய கற்களை வைக்கமுடியாமல் போயிருக்கும், நீதி:...நம் மனமும் அப்படித்தான்... சின்ன சின்ன விஷயங்களை மனத்துக்குள் போட்டு வைத்திருந்தால் பெரிய விஷயங்களுக்கு இடமிருக்காது சின்ன விஷயங்களுக்கு அலட்டுபவர்களால் பெரிய காரியங்களை செய்ய இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக